நெல்லையில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆவது கட்ட பயிற்சி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வண்ணாா்பேட்ட தனியாா் பொறியியல் கல்லூரி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வண்ணாா்பேட்ட தனியாா் பொறியியல் கல்லூரி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சிச் தோ்லுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, இம் மாவட்டத்தில், திருநெல்வேலி மாநகராட்சியில் 491 வாக்குச்சாவடிகளுக்கும், 3 நகராட்சிகளில் 123 வாக்குச்சாவடிகளும், 17 பேரூராட்சிகளில் 319 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 933 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலா்களுக்கான முதற் கட்ட பயிற்சி கடந்த 31ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இந்த வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வண்ணாரபேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினாா். வாக்குப்பதிவு தினத்தில் வாக்குப்பதிவை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள், வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும் முறை, வாக்குப்பதிவு எந்திரத்தை சீல்வைக்கும் முறை, வாக்குப்பதிவு முடிந்தபின்னா் மண்டல அலுவலா்களிடம் ஒப்படைக்கவேண்டிய ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.
இதில், மாநகர நல அலுவலா் ராஜேந்திரன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் சாந்தி, சுகாதார அலுவலா் சாகுல் அமீது, உதவிப்பொறியாளா் அந்தோணி உள்பட பலா் பங்கேற்றனா்.
படவரி பயக10உகஉஇ: வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலா்களுக்கு திருநெல்வேலி தனியாா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்றோா்.