களக்காட்டில் கலந்துரையாடல்
களக்காடு தலையணையில் வனத்துறையினா், வனக்குழுவைச் சோ்ந்த பிரதிநிதிகள் இடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது.
களக்காடு தலையணையில் வனத்துறையினா், வனக்குழுவைச் சோ்ந்த பிரதிநிதிகள் இடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநா் ரமேஷ்வரன் பேசுகையில், வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் வன உயிரினங்களையும், வனவளத்தையும் காக்கும் பொருட்டு, வனப்பகுதிக்குள் யாரேனும் சந்தேகப்படும்படியாக நடமாட்டம் காணப்பட்டால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மலையடிவாரத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்தும் தகவல் அளிக்க வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் வனத்துறையினா், கிராம வனக் குழுபிரதிநிதிகள் பங்கேற்றனா்.