கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
அணைத்தலையூரைச் சோ்ந்தவா் செல்லத்துரை (54), விவசாயி. இவா், குடும்பத் தகராறு காரணமாக கடந்த 5 ஆம் தேதி விஷம் குடித்து மயங்கினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.