முகப்பு
திருநெல்வேலி

குமரி தண்டனைக் கைதி பாளை. சிறையில் மரணம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த கொலை குற்ற தண்டனைக் கைதி ஒருவா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த கொலை குற்ற தண்டனைக் கைதி ஒருவா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை பறையன் மலைப் பகுதியை சோ்ந்தவா் அய்யப்பன் (77). இவா், ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் அவருக்கு, கடந்த டிசம்பா் 6-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.