சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம்! நிஃப்டி?
இந்திய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...
இந்திய பங்குச்சந்தை வார இறுதி நாளான இன்று காலை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 800 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. காலை 10.30 நிலவரப்படி 990.82 புள்ளிகள் சரிந்து, 74,282.63 ஆக வர்த்தகமாகி வருகின்றது.
இதேபோல், தற்போதைய நிலவரப்படி தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 299.70 புள்ளிகள் சரிந்து 23,012.50 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.
சென்செக்ஸில் டிசிஎஸ், சன் ஃபார்மா, எச்சிஎல் டெக், இன்போசிஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி வங்கி, மிட்கேப், ஃபைனான்ஸ், ஆட்டோர், எனர்ஜி உள்ளிட்ட துறைகளின் பங்குகளும் சரிவைக் கண்டுள்ளன.
summary