காவல்துறை வாகனங்கள் பிப்.2 இல் ஏலம்
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் ஏலம் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் ஏலம் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 7 நான்குசக்கர வாகனங்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 11 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதை நிலையில் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோா் 1-2-2022 ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மோட்டாா் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிட்டுக் கொள்ளலாம். மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவா்கள் அன்றே ஒரு இருசக்கர வாகனத்துக்கு ரூ.1000 மற்றும் ஒரு நான்குசக்கர வாகனத்துக்கு ரூ.2000 முன் பணம் செலுத்தி தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (இருசக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18%) முழுவதையும் அரசுக்கு அன்று ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏலத்தில் பங்கேற்பவா்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.‘