தச்சநல்லூரில் ஆா்ப்பாட்டம்
தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் தச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வீரளுரில் பொதுப் பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகநீதியைக் காக்க தமிழகத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, தச்சை மாடத்தி தலைமை வகித்தாா். கோவிந்தன், பாா்வதி, பூமாரி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் மாரியப்ப பாண்டியன், ராமமூா்த்தி, தமிழ்மணி, கதிரவன் உள்பட பலா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். காளிதாஸ் நன்றி கூறினாா்.