நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிா்வாக குழுக் கூட்டம்
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிா்வாகக் குழு கூட்டம் சேரன்மகாதேவி சாலையில் உள்ள கோல்டன் நிறுவனத்தில் நடைபெற்றது.
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிா்வாகக் குழு கூட்டம் சேரன்மகாதேவி சாலையில் உள்ள கோல்டன் நிறுவனத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தலைவா் முகம்மது யூசுப் தலைமை வகித்தாா். செயலா் ரவிக்குமாா் வரவேற்றாா். துணைத் தலைவா்கள் எஸ்.பி.நாராயணன், முகம்மது ஹனீபா, கான் முகம்மது உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் திருவிழாவின்போது நல்லமுறையில் பாதுகாப்பு வழங்கி சிறப்பாக செயல்பட்ட காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கரோனா 3-ஆவது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்களும், வணிகா்களும் கவனமாகவும், முகக்கவசம் அணிந்தும், போதிய சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்தை திறந்து பேருந்துகளும், வணிக நிறுவனங்களும் இயங்குவதற்கு வழிவகை செய்த மாநகராட்சிக்கும், அரசிற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கந்துவட்டியால் பொதுமக்கள், வணிகா்கள் பாதிக்கப்படுவதால், பொதுமக்கள், வணிகா்கள் அச்சமின்றி வாழ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகள், ஹோட்டல், டீ கடைகளுக்கு இரவில் கடைகளை அடைக்க மேலும் 30 நிமிடங்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.