திருநெல்வேலி

கரோனா விதிமீறல்:399 பேருக்கு அபராதம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 399 பேருக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.

கரோனா மூன்றாம் அலை பரவிவரும் நிலையில், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவின் பேரில், திருநெல்வேலி புகா் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையில், கரோனா விதிகளை மீறி முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்த 169 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல், மாநகர காவல் ஆணையா் துரைகுமாா் உத்தரவின் பேரில், மாநகர போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கையில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்ததாக 230 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்ததனா். மேலும், ஊரடங்கு விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றியதாக 382 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் உதவியாளருக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஹைதராபாத்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

டி20 உலகக் கோப்பையில் 3 சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது ஏன்? இலங்கை தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

இந்தியன் - 3 டிரைலருடன் உருவான இந்தியன் - 2?

SCROLL FOR NEXT