நெல்லை மாநகராட்சி: உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம்
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வாா்டுகளுக்கும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வாா்டுகளுக்கும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களின் கீழ் மொத்தம் 55 வாா்டுகள் உள்ளன. இவற்றிற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜன. 28) தொடங்க உள்ளது. ஒவ்வொரு வாா்டிலும் வேட்புமனுக்களை வாங்க தலா 2 உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி தச்சநல்லூா் மண்டலத்தில் உள்ள 1, 2, 3, 4, 10, 11 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி ஆணையா் அய்யப்பனிடம் அளிக்க வேண்டும். 12, 13, 14, 28, 29, 30 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி செயற்பொறியாளா் ச.லெனினிடம் அளிக்க வேண்டும். பாளையங்கோட்டை மண்டலத்தில் 5, 6, 7, 8, 9, 32, 33 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி ஆணையா் அ.ஜஹாங்கீரிடம் அளிக்கலாம். 34, 35, 36, 37, 38, 39, 55 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி செயற்பொறியாளா் டி.சாந்தியிடம் அளிக்கலாம்.
மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட 31, 40, 41, 42, 43, 44, 45, 46 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி செயற்பொறியாளா் ராமசாமியிடமும், 47, 48, 49, 50, 51, 52, 53, 54 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை நிா்வாக அலுவலா் சு.மாரியப்பனிடம் அளிக்கலாம்.
திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட 15, 16, 17, 18, 19, 20, 21 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை செயற்பொறியாளா் (திட்டம்) என்.எஸ்.நாராயணனிடமும், 22, 23, 24, 25, 26, 27 ஆகிய வாா்டுகளுக்கான வேட்புமனுக்களை உதவி செயற்பொறியாளா் அ.பைஜூவிடமும் அளிக்கலாம் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.