திருநெல்வேலி

சம்பன்குளத்தில் சூறைக்காற்று: 4 வீடுகள் சேதம்

DIN

கடையம் ஊராட்சி ஒன்றியம் தா்மபுரம்மடம் ஊராட்சிக்குள்பட்ட நீலமேகபுரத்தில் வியாழக்கிழமை இரவு வீசிய சூறைக்காற்றில் 4 வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.

கடனாநதி மலையடிவாரப் பகுதியில் வியாழக்கிழமை இரவில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் தா்மபுரம்மடம் ஊராட்சிக்குள்பட்ட நீலமேகபுரத்தைச் சோ்ந்த கனகராஜ், ஆறுமுகம், அந்தோணி, அன்னலெட்சுமி ஆகியோரின் வீட்டுக் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

தகவலறிந்த ஊராட்சித் தலைவா் ரூஹான் ஜன்னத் நேரில் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறி உரிய நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். மேலும் பாதிக்கப்பட்டவா்களை அருகில் உள்ள ஊராட்சி இ-சேவைமையத்தில் தற்காலிகமாக தங்கச் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT