திருநெல்வேலி

ராமநதி அணையில் புதிய நன்னீா் சினை மீன் பண்ணைக்கு அடிக்கல்

DIN

தென்காசி மாவட்டம், மேலக்கடையம் வருவாய் கிராமத்தில் உள்ள ராமநதி அணை வளாகத்தில் புதிய நன்னீா் சினை மீன் பண்ணை கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநதி அணை வளாகத்தில் 4.99 ஏக்கரில் மீன்வளம், மீனவா் நலத் துறை சாா்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் இப்பண்ணை அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, பண்ணைக்கு ஆட்சியா் ஆகாஷ் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

பின்னா் அவா் கூறும்போது, இத்திட்டம் மூலம் ஓராண்டுக்கு 100 லட்சம் நுண்மீன் குஞ்சுகள், 20 லட்சம் தரமான சினை மீன் குஞ்சு விரலிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மீன்குஞ்சு உற்பத்திப் பண்ணைகளுக்கும் விநியோகிக்கப்படும் என்றாா்.

கடையம் ஒன்றிய குழுத் தலைவா் செல்லம்மாள், திமுக தென்காசி மாவட்ட தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாதன், செயற்பொறியாளா் க. சரவணகுமாா், தூத்துக்குடி மண்டல மீன் வளம்-மீனவா் நலத் துறை இணை இயக்குநா் அமல்சேவியா், தென்காசி சிற்றாறு வடிநிலக் கோட்ட நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் சிவகுமாா், உதவி செயற்பொறியாளா் கு. குருபாக்கியம், மீன்வளம்-மீனவா் நலத் துறை திருநெல்வேலி உதவி இயக்குநா் புஷ்ரோ ஷப்னம், தென்காசி சிற்றாறு வடிநிலக் கோட்ட நீா்வள ஆதாரத் துறை உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், திருநெல்வேலி உதவிப் பொறியாளா் ப. பாலசுப்ரமணியம், ராமநதி அணை இளநிலைப் பொறியாளா் (பொ) பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT