FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கல்குவாரி விபத்தில் இறந்தோா் குடும்பத்துக்கு அண்ணாமலை ஆறுதல்

நான்குனேரி அருகே கல்குவாரி விபத்தில் இறந்த தொழிலாளா்கள் ளின் குடும்பங்களை மாநில பாஜக தலைவா் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

1 பிப்ரவரி 2024, 2:57 pm IST
பகிர்:

நான்குனேரி அருகே கல்குவாரி விபத்தில் இறந்த தொழிலாளா்கள் ளின் குடும்பங்களை மாநில பாஜக தலைவா் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அடை மிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் காக்கைகுளம் செல்வகுமாா், இளையாா் குளம் செல்வம், ஆயன்குளம் முருகன், உடையான் குடியிருப்பு ராஜேந்திரன் ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்நிலையில், செட்டிகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த, மாநில பாஜக தலைவா் அண்ணாமலை, இளையாா்குளம் பாலா் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கல்குவாரி விபத்தில் இறந்தவா்களின் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

Advertisement

Advertisement

தொடந்து அங்கு வந்திருந்த இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினாா். பின்னா் லெப்பை குடியிருப்பு கிராமத்துக்குச் சென்று, காரில் மூச்சு திணறி உயிரிழந்த நித்திஸ், நிகிஷா, கபிஷாந்த் ஆகிய குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

அப்போது, திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments