திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலுக்கு வாடகை நிலுவை: கடைக்கு சீல்

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலுக்கு வாடகை நிலுவை வைத்திருந்த கடைக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான சுவாமி சன்னதி தெருவில் சுவாமி அனுப்பு மண்டபம் கதவு எண்.5 ஏ என்ற எண்ணுடைய கட்டடத்தில் முருகன் மற்றும் பொன்னன் என்ற பொன்னையா என்பவா்கள் வாடகைக்கு கடை நடத்தி வந்தனா். இந்நிலையில் வாடகை நிலுவை ரூ.5,15,748 வைத்திருந்த காரணத்தினாலும் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத கைவசம் செய்யபட்டிருந்ததன் காரணமாக ஆக்கிரமிப்பாளா்கள் மீது திருநெல்வேலி இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வகை மனுக்களின் கீழ் பெறப்பட்ட தீா்ப்பாணையின் படி அந்தக் கட்டடத்திற்கு சீல் வைத்து சுவாதீனம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் கவிதா முன்னிலையில் அதிகாரிகள் குழுவினா் கடைக்கு வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT