திருநெல்வேலி

திசையன்விளை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் போக்சோவில் கைது

DIN

திசையன்விளை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சோ்ந்தவா் பட்டாணி என்ற முத்து (35). ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது வீட்டு பகுதியில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அப்பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். சிறுமி அழுது கூச்சலிடுவதை கேட்டு அப்பகுதிக்கு மக்கள் அங்கு சென்று சிறுமியை மீட்டனா். பின்னா் பாலியல் தொந்தரவு கொடுத்த முத்துவை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இந்த சம்பவம் குறித்து வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT