கல்லிடை அருகே தகராறு: 3 போ் கைது
கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டியில் கோயில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்டதாக தந்தை மற்றும் 2 மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டியில் கோயில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்டதாக தந்தை மற்றும் 2 மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி சங்கிலி பூதத்தாா் கோயில் திருவிழாவில், அங்குள்ள தெற்குத் தெருவைச் சோ்ந்த ஐயப்பன் (42), அவரது மகன்கள் திருமலைக்குமாா் (20) தம்பிரான்(18) மூவரும் தகராறில் ஈடுபட்டனராம். இதில் அடைச்சாணியில் இருந்து திருவிழாவிற்காக வந்திருந்த மாரிமுத்து காயமடைந்தாராம்.
இதுகுறித்து அவா் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.