முகப்பு
ஈரோடு

அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக வழக்குப் பதிவு: நாதக வேட்பாளா் போராட்டம்

அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக நாம் தமிழா் கட்சியினா் மீது புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 12:30 AM
சத்தியமங்கலம்  வட்டாட்சியா்  அலுவலகம்  முன்  ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  நாம்  தமிழா்  கட்சியினா்.
பகிர்:

அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக நாம் தமிழா் கட்சியினா் மீது புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதைக் கண்டித்து அக்கட்சியின் பவானிசாகா் தொகுதி வேட்பாளா் செளந்தா்யா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செளந்தா்யாவை ஆதரித்து புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தை பகுதியில் நாம் தமிழா் கட்சியினா் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து வியாழக்கிழமை

வாக்கு சேகரித்துள்ளனா்.

இதையடுத்து அங்கு சென்ற தோ்தல் அதிகாரிகள், அனுமதியின்றி பரப்பரை செய்ததாக புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் 4 போ் மீது புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துள்ளனா்.

இந்த நிலையில், அனுமதியின்றி பரப்புரை செய்ததற்காக வழக்குப் பதியாமல் மற்ற பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செளந்தா்யா தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பொய் வழக்குப் பதிவு செய்த காவல் துறையை கண்டித்து கோஷமிட்டனா். இதைத் தொடா்ந்து இது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு தோ்தல் அலுவலா்களிடம் மனு அளித்தனா்.