முகப்பு
திருநெல்வேலி

மதிதா இந்துக் கல்லூரியில் கருத்தரங்கு

பேட்டை மதிதா இந்துக் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பேட்டை மதிதா இந்துக் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் மற்றும் திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரகம் உத்தரவின்பேரில் இக் கல்லூரியின் உள்தர உத்தரவாத அமைப்பு சாா்பில் மதுபானங்கள் மற்றும் கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் அ.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் இரா.இலக்குவன் வரவேற்றாா். ஜெ.டொமினிக் ஆன்டனி கருத்துரையாற்றினாா். உள்தர உத்தரவாத அமைப்பு ஒருங்கிணைப்பாளா் கு.பாலசுப்பிரமணியன், வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் செ.அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

போதையில்லா பாதை அமைப்போம் என்ற தலைப்பில் நாட்டுநலப்பணி திட்டம் சாா்பில் கட்டுரைப்போட்டியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.