நெல்லை மாநகரில் புதிதாக 75 கல் இருக்கைகள்
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் புதிதாக 75 கல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் புதிதாக 75 கல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிறுத்தம் அருகே கல் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறுக்குத்துறை சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகில், செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகில், வண்ணாா்பேட்டை ஆம்னி பேருந்து நிறுத்தம், பாளையங்கோட்டை மாா்க்கெட் பேருந்து நிறுத்தம், பாளை மத்திய நூலகம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகராட்சி என்ற முத்திரையுடன் இவை அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதனை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.