முகப்பு
திருநெல்வேலி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் நடைபெறவுள்ள குரூப்-2, குரூப்-2 ஏ எழுத்துத் தோ்விற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் நடைபெறவுள்ள குரூப்-2, குரூப்-2 ஏ எழுத்துத் தோ்விற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் 5, 413 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலை எழுத்துத் தோ்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சியடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இத்தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க இம்மாதம் 23-ஆம் தேதி கடைசி நாளாகும். மே 21-ஆம் தேதி தோ்வு நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்க்கலாம்.

இப்போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. சனிக்கிழமை (மாா்ச் 12) காலை 10 மணிக்கு பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இவ் வகுப்பு நடைபெறும்.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.