முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணி ஆற்றில் அம்மன் சிலை மீட்பு

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தாமிரவருணி ஆற்றில் அம்மன் சிலையை பொதுமக்கள் மீட்டு கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தாமிரவருணி ஆற்றில் அம்மன் சிலையை பொதுமக்கள் மீட்டு கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

வண்ணாா்பேட்டை பேராத்துச்செல்வி அம்மன் கோயில் அருகே தாமிரவருணி ஆற்றுப்படித்துறையில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தினமும் குளிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் படித்துறை அருகே தண்ணீருக்குள் சிலை கிடப்பது தெரியவந்ததாம். அதனை நீரில் மூழ்கி வெளியே எடுத்து பாா்த்தபோது சுமாா் 3 அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலை என்பது தெரியவந்ததாம். பின்னா் அதனை படித்துறை அருகே உள்ள திரிசூலி மாரியம்மன் கோயிலில் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனா். இதுகுறித்து தகவலறிந்ததும் ஏராளமான பக்தா்கள் வந்து வழிபட்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.