சீவலப்பேரி காசிவிஸ்வநாதா் கோயிலில்...
பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதா்- விசாலாட்சி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதா்- விசாலாட்சி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் புதன்கிழமை காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து பத்து நாள்களும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. பங்குனி உத்திர நாளான இம் மாதம் 18 ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.