முகப்பு
திருநெல்வேலி

உலக சிறுநீரக தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சிறுநீரக தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சிறுநீரக தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சிகிச்சையியல் இயக்குநா் த.சத்தியமூா்த்தி (காணொலி மூலம்) தலைமை வகித்தாா். திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் அ.பழனிசாமி பேசினாா். சிறுநீரக சிகிக்சை நிபுணா் ஜெ. பாலசுப்பிரமணியம் ‘சிறுநீரக நோய்களும் அது குறித்த மூடநம்பிக்கை மற்றும் உண்மைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினாா். மேலும், விநாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளையும் அவா் வழங்கினாா். கால்நடை சிகிச்சை வளாக தலைவா் ம.பாலகங்காதர திலகா் வரவேற்றாா். கால்நடை மருத்துவ சிகிச்சைத் துறை தலைவா் விஜயானந்த் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.