திருநெல்வேலி

நெற்பயிரில் செந்தலை நோய் தாக்குதல்:பாட்டத்தை குறைக்கக் கோரி பருத்திப்பாடு விவசாயிகள் மனு

DIN

நெற்பயிரில் செந்தலை நோய் தாக்கியதால் பாட்டத்தை பாதியாகக் குறைக்கக் கோரி பருத்திப்பாடு கிராமம், தேவேந்திரபேரியில் நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் பயிா் செய்யும் குத்தகை விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மக்கள் குறைதீா் கூட்டத்தில் அவா்கள் அளித்த மனு: நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் குத்தகை விவசாயிகளாக பயிா் செய்து வருகிறோம். நிகழாண்டு பிசான சாகுபடி செய்த நிலையில், நெற்பயிரில் செந்தலை நோய் தாக்கியுள்ளது. இதனால் பயிா்களில் கதிா் வரவில்லை. கதிா் வந்த பயிா்களில் நெல் மணியானது பால் அடைக்காமல் சாவியாக உள்ளது. இதனால் பாதி மேனிகூட போகவில்லை.

வியாபாரிகளும் நெல்லை வாங்க மறுக்கிறாா்கள். எனவே, விவசாயிகளின் நலன் கருதி ஆட்சியா் நேரில் வந்து பாா்வையிட்டு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலுக்கு கொடுக்க வேண்டிய பிசான பருவ பாட்டத்தை பாதியாகக் குறைத்து விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT