குறுக்குத்துறை சுப்பிரமணி சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்
திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீசண்முகா் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீசண்முகா் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 6 மணிக்கு உருகுச் சட்டசேவையும், சண்முகாா்ச்சனையும் , இரவு சுவாமி சண்முகா் வைரகிரீடம், வைரவேல் அணிந்து நகரம் ரதவீதியில் திருவீதியுலா வருதலும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) காலை 9 மணியளவில் திருநெல்வேலி நகரம் காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்காட்சி கொடுத்தல் வைபவம் நடைபெறும். இரவு 7 மணிக்கு ஸ்ரீவள்ளி திருக்கல்யாணம் திருக்கோயிலில் நடைபெறும்.