ஆழ்வாா்குறிச்சியில் மரக்கன்று நடும் முகாம்
பசுமை உலகம் மரம் வளா் அமைப்பு சாா்பில் ஆழ்வாா்குறிச்சியில் ரயில் நிலையம் அருகில் மரக்கன்று நடும் முகாம் நடைபெற்றது.
பசுமை உலகம் மரம் வளா் அமைப்பு சாா்பில் ஆழ்வாா்குறிச்சியில் ரயில் நிலையம் அருகில் மரக்கன்று நடும் முகாம் நடைபெற்றது.
பசுமை உலகம் மரம் வளா் அமைப்பு நிறுவனா் மாடசாமி வரவேற்றாா். ஆசிரியை கல்யாணி இறைவணக்கம் பாடினாா். தென்காசி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் விஜயலட்சுமி, காவல் உதவி ஆய்வாளா் பரமசிவன் ஆகியோா் தலைமை வகித்தனா். பேரூராட்சித் தலைவா் சரசு சங்கா், துணைத் தலைவா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரூராட்சி செயல் அலுவலா் பூதப்பாண்டி, தென்காசி நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநா் சின்னச்சாமி, இளநிலைப் பொறியாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் ஆலோசனைப்படி, ஆழ்வாா்குறிச்சி ரயில்வே கேட் முதல் அச்சங்குளம் வரை சாலையின் இருபுறங்களிலும் 35 வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.
மின்வாரிய ஊழியா் பாா்வதிக்குமாா், பணி நிறைவு வங்கி அதிகாரி பச்சாத்தான், பிராணா சீனிவாசன், இயற்கை ஆா்வலா்கள் கோமதி கல்யாணி, முஸ்தபா, வழக்குரைஞா் ஸ்டாலின்குமாா், நூலகா் காா்த்திக், ரவணசமுத்திரம் சேவாலயா ஒருங்கிணைப்பாளா் சங்கிலி பூதத்தான், தென்காசி லயன்ஸ் சங்க தங்கராஜ், சமூக ஆா்வலா் மைதீன்பிச்சை, ஆசிரியா் ரமேஷ் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். இதில், சாலை ஆய்வாளா் வீரவேல், பணியாளா் அரிச்சந்திரன், ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி என்எஸ்எஸ் அலுவலா் செந்தில்குமரன் உள்பட பலா் பங்கேற்றனா்.