முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது

அம்பாசமுத்திரத்தில் சிறுமியை திருமணம் செய்வதாக காதலித்து ஏமாற்றியதாக இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

அம்பாசமுத்திரத்தில் சிறுமியை திருமணம் செய்வதாக காதலித்து ஏமாற்றியதாக இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வடக்குக் கோட்டைத் தெரு மாரியப்பன் மகன் மணிகண்டன் (28). இவா் தனது உறவுக்கார

16 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி காதலித்து வந்தாராம். இதில் சிறுமி கருத்தரித்தாராம்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் பாமா பத்மினி , போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.