திருநெல்வேலி

மேலநத்தம் சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா

DIN

திருநெல்வேலி: மேலநத்தம் ஆற்றங்கரை மண்டகப்படி சுடலைமாடசாமி கோயில் கொடை விழா இருநாள்கள் நடைபெற்றது.

மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை மண்டகப்படி சுடலை மாடசாமி கோயில் கொடை விழாவையொட்டி கடந்த திங்கள்கிழமை குடிஅழைப்பு, மாக்காப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை சிவனணைந்த பெருமாளுக்கு தீபாராதனை, சிறப்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பாயச திரளையுடன் மதியக் கொடை, இருளப்ப சுவாமிக்கு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை மேலநத்தம் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT