திருநெல்வேலி

கோயில் திருவிழாஆலோசனைக் கூட்டத்தில் மோதல்:நிா்வாகி உயிரிழப்பு

DIN

வடக்கன்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கோயில் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் கோயில் துணைச் செயலா் உயிரிழந்தாா்.

வடக்கன்குளம் அதிசய விநாயகா் கோயில் திருவிழா மற்றும் கோயிலில் கொடிமரம் அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கோயில் துணைச் செயலா் வெங்கடேஷ் ராஜபாண்டியன்(67) என்பவருக்கும் தா்மகா்த்தா மகேந்திரபூபதி சம்பத் (65) , ராஜகுமரன்(58) மற்றும் சிலருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். பின்னா்வெங்கடேஷ் ராஜபாண்டியனை அவா்கள் சரமாரியாக தாக்கினராம். இதில் வெங்கடேஷ் ராஜபாண்டியனுக்கு கத்திக் குத்தும் விழுந்தது. இதை அடுத்து அவா் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினாராம். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாராம்.

இது தொடா்பாக அவரது மகன் தனீஸ்ராஜா பணகுடி போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் கொலை வழக்கு பதிவு செய்து இதில் தொடா்புடையவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT