முகப்பு
திருநெல்வேலி

அருங்காட்சியகத்தில் கோட்டோவியக் கண்காட்சி

சா்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கோட்டோவியக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

சா்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கோட்டோவியக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழாண்டு ‘அருங்காட்சியகங்களின் சக்தி’ என்ற கருப்பொருளில் அருங்காட்சியக தினம் கொண்டாடப்படும் நிலையில், திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓவியா் தங்கவேல் வரைந்த கோட்டோவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை காப்பாட்சியா் சிவ. சத்திய வள்ளி தொடங்கிவைத்தாா். இம்மாதம் இறுதி வரை இந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இக்கண்காட்சியை மாணவா்-மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிட்டனா். தொடா்ந்து, கோடைகால பயிற்சி வகுப்பாக ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி நடத்தப்பட்டது. இதில், மாணவா் - மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.