திருநெல்வேலி

சுத்தமல்லியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

DIN

 சுத்தமல்லியில் கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை அரிவாளால் வெட்டியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சுத்தமல்லி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் ஆனந்த் (24). இவா் சுத்தமல்லி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கோயில் கொடைவிழாவுக்குச் சென்றிருந்தாராம். அப்போது, அவருக்கும் அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் மாயாண்டி (42) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அதில், மாயாண்டி அரிவாளால் ஆனந்தை வெட்டி விட்டு தப்பினாராம். பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து மாயாண்டியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT