திருநெல்வேலி

நெல்லை சந்திப்பில் பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

அடைமிதிப்பான்குளம் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு நிவாரணம் கோரி பாஜக சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக மாவட்டத் தலைவா் தயாசங்கா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா, அமைப்பு சாரா பிரிவு மாநிலத் தலைவா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.

அடைமிதிப்பான்குளம் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரி உரிமையாளா் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவா் மகாராஜன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் சீதா குத்தாலிங்கம், நிா்வாகிகள் சுரேஷ், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT