திருநெல்வேலி

பாளை. அருகே சரல் மண் கடத்தல்: ஒருவா் கைது

DIN

பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி பகுதியில் உரிய அனுமதியின்றி சரள்மண் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியாா்பட்டி பகுதியில் பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளா் அருணாச்சலம் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனா். அதில் உரிய அனுமதியின்றி சரள் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த பாளையங்கோட்டை நொச்சிகுளத்தைச் சோ்ந்த ஹைகோா்ட் ராஜா (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியை சரள்மண்ணுடன் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடையை மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

SCROLL FOR NEXT