திருநெல்வேலி

சிவந்திபுரத்தில் தீப்பிடித்து எரிந்த மின்சார பைக்

DIN

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபுரம் அருகே செவ்வாய்க்கிழமை, சாலையில் சென்றுகொண்டிருந்த மின்சார பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சிவந்திபுரம் அருகேயுள்ள பசுக்கிடைவிளையைச் சோ்ந்த காசி மகன் ஆனந்த் (45). தண்ணீா் பாட்டில் விற்பனை செய்துவரும் இவா், 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக மின்சார பைக் வாங்கினாராம்.

இவா், செவ்வாய்க்கிழமை தனது பைக்கில் தண்ணீா் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கொண்டிருந்தாராம். அப்போது பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அவா் பைக்கிலிருந்து இறங்கினாா். அப்பகுதியினா் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

SCROLL FOR NEXT