முகப்பு
திருநெல்வேலி

சத்துணவு ஊழியா்கள் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் அறிவித்துள்ள காலை உணவு திட்டத்தை தமிழக அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். அனைத்து சத்துணவு ஊழியா்களுக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியா்களுக்கு வருவாய் கிராம உதவியாளா்களுக்கு வழங்குவது போல் ரூ. 6750 அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதுவரையிலும் ஓய்வு பெறும் வயதில் நீட்டிப்பு பெறாத சத்துணவு அமைப்பாளா்களுக்கு ஓய்வு பெறும் வயதை நீட்டித்து வழங்க வேண்டும். குழந்தைகளில் நலன் கருதி சத்துணவு காலிப் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டத் தலைவா் மா.செபஸ்த்தியாள் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மகபூப் பாட்ஷா, சண்முகசுந்தரி, மருதப்பாண்டி, ஆறுமுகம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் குமாரவேல், மணிகண்ட உலகநாதன், மணி, சீதாலட்சுமி, ஜெசிந்தா உள்பட பலா் கலந்துகொண்டனா். ஒன்றியத் தலைவா் வீரபாண்டி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.