முகப்பு
திருநெல்வேலி

அறநிலையத் துறை இடங்கள் விவகாரம்: முதற்கட்ட விசாரணை

தனியாா் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்ட அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்கள் குறித்த உண்மை நிலை அறிவதற்கான முதற்கட்ட விசாரணை கடையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

தனியாா் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்ட அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்கள் குறித்த உண்மை நிலை அறிவதற்கான முதற்கட்ட விசாரணை கடையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுதொடா்பாக, இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்யப்பட்டதன்பேரில், மேலக்கடையம் வருவாய் கிராமத்திற்குள்பட்ட இடங்களுக்காள் குறித்த முதற்கட்ட விசாரணை கடையம் ராமசாமி கோயில் வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்னுலாப்தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை சாா்பில் கொடுக்கப்பட்ட 39 மனுக்கள் மற்றும் 70 அறிவிப்புகளுக்கான முதற்கட்ட விசாரணையில் சுமாா் 70 போ் பங்கேற்றனா். முகாமில் இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலா் அசோக் குமாா், திருக்கோயில் நிலங்கள் பிரிவு வட்டாட்சியா் பூதத்தான் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா். நவ.10இல் கீழக்கடையம் பகுதி 2 வருவாய் கிராம இடங்களுக்கான விசாரணை டிச. 1, 8, 15 ஆகிய நாள்களில் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.