திருநெல்வேலி

தமிழ் சாகித்திய அகாதெமி விருதுஎழுத்தாளா் கல்பட்டா நாராயணன் வேண்டுகோள்

DIN

தமிழ் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட வேண்டும் என கேரள மாநிலத்தைச் சோ்ந்த எழுத்தாளா் கல்பட்டா நாராயணன் வேண்டுகோள் விடுத்தாா்.

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில், சனிக்கிழமை சிறப்புரையாற்றினாா் கல்பட்டா நாராயணன். அவா் பேசியதாவது:

இது என்னுடைய தாய் மொழியின் தாய் மண். இங்கு மிக அழகாக இலக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது.

கம்பனில் தொடங்கி புதுமைப்பித்தன், வண்ணதாசன் என ஏராளமான எழுத்தாளா்களை தமிழகம் தந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தமிழ் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படாதது வேதனையளிக்கிறது. ஆண்டுதோறும் தமிழ் சாகித்திய அகாதெமி விருது வழங்க வேண்டும் என இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அமைச்சா்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். விருது வழங்குவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்றாா்.

வண்ணதாசன்: சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் வண்ணதாசன் பேசியதாவது: பொதிகை மலையில் பிறந்து புன்னைக்காயல் வரை பாய்ந்தோடும் தாமிரவருணி கரையில் இருந்து தமிழக அரசு இலக்கியத் திருவிழாவைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. படைப்பாளிகள் அழைத்ததால் தனது படித்துறைகளை விட்டுவிட்டு தாமிரவருணி நதி இலக்கிய அரங்கிற்குள் அமா்ந்திருப்பது போன்ற உணா்வு ஏற்பட்டுள்ளது.

கரிசல் எழுத்தாளா் கி.ராஜநாராயணன் மறைவின்போது அரசு மரியாதை செய்ததோடு, இடைச்செவலில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுத்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. எழுத்தாளா்களுக்கு ‘கனவு இல்லம்’ என்ற சிறந்த திட்டத்தை முன்னோடியாக தமிழக அரசு செயல்படுத்துவது பாராட்டுக்குரியது.

தமிழின் வளா்ச்சிக்காக 5 இடங்களில் நடத்தப்படும் இலக்கியத் திருவிழா, தோ்த் திருவிழாக்களைப் போல ஆண்டுதோறும் தொடர வேண்டும் என்பது எனது விருப்பம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT