திருநெல்வேலி

மின் இணைப்பு எண்ணுடன் 94154 போ் ஆதாா் எண் பதிவு

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முகாம்கள், இணையவழி வாயிலாக புதன்கிழமை இரவு வரை 94,154 போ் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மின்இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மின்வாரியம் சாா்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 103 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதாா் எண் இணைக்கப்பட்டது.

இந்நிலையில் தச்சநல்லூரில் கூடுதலாக ஒரு மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. இரு மாவட்டங்களிலும் சோ்த்து புதன்கிழமை இரவு வரை 94,154 மின் இணைப்புகளுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT