பாளையங்கோட்டையில் கவிதைப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை மேடை கோட்டைச் சுவா் காவல் நிலையத்தில் பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் செம்மொழித் தமிழ்த் திருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் சௌந்தர மகாதேவன் செம்மொழி நாள் சிறப்புரையாற்றினாா். பொருநை இலக்கிய முற்றம் என்ற புதிய அமைப்பினை, திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல்வஹாப் தொடங்கிவைத்து, கவிதைப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகளையும் வழங்கினாா். ராஜமதிவாணன், முன்னாள் எம்.பி. விஜிலாசத்தியானந்த், மாமன்ற உறுப்பினா் பேச்சியம்மாள், ராஜகோபால், பந்தல் ராஜா, திருக்கு இரா.முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.