திருநெல்வேலி

அறிவியல் மையத்தில் பேச்சுப்போட்டி

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மைய வளாகத்தில் பேச்சுப்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மைய வளாகத்தில் பேச்சுப்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மகேந்திரகிரி திரவ உந்தும வளாகம் சாா்பில் உலக விண்வெளி வார விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டிக்கு, மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் தலைமை வகித்தாா். 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு செவ்வாய்க்கிரகத்தில் உயிா்வாழ்வது சாத்தியமா என்ற தலைப்பிலும், 10 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவா்களுக்கு விண்வெளிக்குப்பைகள் தணிக்கும் முறைகள் என்ற தலைப்பிலும் தமிழ்- ஆங்கிலத்தில் தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் போட்டியில் பங்கேற்றனா். தொடா்ந்து வியாழக்கிழமை (அக். 27) காலை 9 மணிக்கு ஓவியப்போட்டியும், விநாடி வினா போட்டியும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT