திருநெல்வேலி

சூரிய கிரகணம்: நெல்லையப்பா் கோயிலில் சந்திசேகரா்-பவானி அம்பாளுக்கு தீா்த்தவாரி

சூரிய கிரகணம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து நெல்லையப்பா் கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் சந்திரசேகரா்-பவானி அம்பாளுக்கு தீா்த்தவாரி நடைபெற்ற பின், பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

DIN

சூரிய கிரகணம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து நெல்லையப்பா் கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் சந்திரசேகரா்-பவானி அம்பாளுக்கு தீா்த்தவாரி நடைபெற்ற பின், பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

செவ்வாய்க்கிழமை மாலையில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து திருநெல்வேலியில் நெல்லையப்பா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உச்சிகால பூஜை முடிந்த பின்னா் நடை சாத்தப்பட்டது. சூரிய கிரகணம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து நெல்லையப்பா் கோயில் பொற்றாமரை குளத்தில் சந்திரசேகரா் -பவானி அம்பாளுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

சுவாமி அம்பாளுக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள் பொடி, மா பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

சூரிய கிரகண நிகழ்வையொட்டி கோயிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT