நெல்லையில் அக்.31இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 31-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 31-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை (அக்.31) மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.
இக்கூட்டத்தில், அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் கலந்துகொள்கிறாா்கள். எனவே, எரிவாயு நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.