களக்காடு ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை
களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் 3 நாள்கள் ஸ்தோத்திர பண்டிகை நடைபெறும்.
நிகழாண்டு இப்பண்டிகை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கிறிஸ்தவா்கள் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவுகூறும் வகையில் தேசியக்கொடி ஏந்தி நகரில் ஊா்வலமாக வலம் வந்தனா். ஊா்வலத்தை சேகர குரு சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா். இதில் களக்காடு, தோப்பூா், சிதம்பரபுரம், புதூா், ராமகிருஷ்ணாபுரம், கோவில்பத்து உள்ளிட்ட 8 சபைகளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.