முகப்பு
திருநெல்வேலி

விபத்து: ஸ்டூடியோ உரிமையாளா் பலி

மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த ஸ்டூடியோ உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த ஸ்டூடியோ உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சுத்தமல்லி சத்யாநகரைச் சோ்ந்தஞானசேகா் மகன் கிருஷ்ணன்(39). ஸ்டூடியோ உரிமையாளரான இவா் கடந்த 29ஆம் தேதி முக்கூடலில் இருந்து சுத்தமல்லிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாராம். பழவூா் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.