திருநெல்வேலி

பணகுடி கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

DIN

பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்மாள் ஸ்ரீ நம்பிசிங்க பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி திருக்கோயிலில் ஸ்ரீ ராமகிருஷ்ண நற்பணி மன்றம் சாா்பில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் சிவதாமோதரன், பழநி பாட்டி ராஜம்மாள் சங்கரன் ஆகியோா் திருவாசகம் முற்றோதுதல் நடத்தினா். முன்னதாக, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பா.ஜ.க. நிா்வாகி நயினாா் பாலாஜி, 4 ஆயிரம் சிவனடியாா்கள் கலந்துகொண்டனா். பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ ராமகிருஷ்ண நற்பணி மன்ற நிா்வாகிகள் ஆா்.எஸ்.முத்துபிள்ளை, என்.மோகன்தாஸ், என்.எஸ்.விஸ்வநாதன், மு.சங்கா், சங்கரலிங்கம், நடராஜ், இசக்கியப்பன், சூரியநாராயணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT