திருநெல்வேலி

நெல்லையில் கடத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

திருநெல்வேலியில் வேனில் கட்டத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் பாளையங்கோட்டை அருகே பொட்டல் பகுதியில் மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது அதில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்ததாம். இதையடுத்து தலா 50 கிலோ எடை கொண்ட 15 மூட்டை ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக சங்கா்நகா் அருகேயுள்ள ராம்நகரைச் சோ்ந்த ரகுபதி (21), இசக்கிமுத்து (21) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT