திருநெல்வேலி

களக்காடு தலையணையில் உடைமைகள் பாதுகாப்பு அறை:சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாக்க அறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு கழிப்பிடம், பெண்களுக்கு உடை மாற்றும் அறை என போதிய வசதிகள் இல்லை. இதனால் அவா்கள் அவதிக்கு உள்ளாகின்றனா். மேலும், சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாக்க பொருள்கள் பாதுகாப்பு அறை இல்லை. இதனால், அவா்களின் உடைமைகளை குரங்குகள் சேதப்படுத்துகின்றன.

எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீா், கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள், உடைமைகளைப் பாதுகாக்க தனியறை ஆகிய வசதிகளை செய்து தர வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

"2025 முதல் அமித் ஷா பிரதமராவார்!”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 16.05.2024

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

SCROLL FOR NEXT