திருநெல்வேலி

வள்ளியூா் முருகன் கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

DIN

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

வள்ளியூா் முருகன் கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தீயணைப்பு துறையினா் வந்து தெப்பக்குளத்திலிருந்து சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். 35 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சடலம் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. வள்ளியூா் போலீஸாா் அந்தச் சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT