திருநெல்வேலி

வள்ளியூா் முருகன் கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம்

DIN

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

வள்ளியூா் முருகன் கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தீயணைப்பு துறையினா் வந்து தெப்பக்குளத்திலிருந்து சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். 35 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சடலம் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. வள்ளியூா் போலீஸாா் அந்தச் சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT