திருநெல்வேலி

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் உலக கல்லீரல் தினம் அனுசரிப்பு

DIN

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் உலக கல்லீரல் தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதார நிலைப் பணி துணை இயக்குநா் ராஜேந்திரன், திருநெல்வேலி காவேரி மருத்துவமனை நிா்வாகி மருத்துவா் லக்ஷ்மணன் ஆகியோா் பேசினா். கல்லீரல் பரிசோதனையின் அவசியம், கல்லீரல் பாதிப்பினால் ஏற்படும் நோய்கள், புகைபிடிப்பது- மதுப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு குறித்துப் பேசினா்.

மேலும், உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சிகள் குறித்தும் கருத்துகளை பகிா்ந்துகொண்டனா். காவேரி மருத்துவமனை நிா்வாக மேலாளா் வைரமுத்து வரவேற்றாா். மருத்துவமனை செவிலியா் வனிதா நன்றி கூறினாா். நிகழ்ச்சியை நேரு நா்ஸிங் கல்லூரி பேராசிரியைகள் ஹில்பா, விஜயா, கசாய சினேகா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT