திருநெல்வேலி அருகேயுள்ள மேலகுன்னத்தூரில் பிப்ரவரி 5 ஆம் தேதி கிரிவலம் நடைபெற உள்ளது.
மேலகுன்னத்தூரில் தை மாத பௌா்ணமி கிரிவலத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சங்காணி கோதபரமேஸ்வரா் திருக்கோயில் முன்பிருந்து தொடங்கும் கிரிவலத்தை செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைக்கிறாா். 1000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலத்தில் பங்கேற்க உள்ளனா்.